Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7709
Title: சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில்; இஸ்லாமிய நிறுவனங்களின் பங்கிளப்பு -வாழைச்சேனை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு முறை
Other Titles: Developing of social harmony in Islamic institutions based on Vallaichenai
Authors: Sarjoon, R. A.
Masliya, A. L.
Islamic Studies
Keywords: வாழைச்சேனை
சமூக நல்லிணக்கம்
தமிழர்கள்
முஸ்லிம்கள்
இஸ்லாமிய நிறுவனங்கள்
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: இலங்கை பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றமையினால் இந்தாட்டில் வாழும் மக்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தேவைப்பாடுகள் உள்ளன. அந்தவகையில் "சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் நல்லுறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தியுள்ளது இதனால் இப்பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமான ஒன்றாகும். இதனை ஒழுங்கமைக்கும் பொறுப்பில் இப்பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்புகளை மேற்கொண்டு வருவதனை இவ்வாய்வினூடாக அறிந்து கொள்ள முடிந்தது. எனவே இவ்வாய்வானது சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுவதுடன் சமூக நல்லிணக்கத்தை பல்லின சமூக மட்டத்தில் ஏற்படுத்த இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிங்களிப்புக்களையும், எதிர்நோக்கும் சவால்கள்களையும் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கங்களாகும். ஆய்வு முறையியலானது பண்புசார் அடிப்படையில் காணப்படுவதோடு முதலாம் நிலைத்தரவுகளான நேரடி அவதானிப்பு, மற்றும் நேர்காணல் என்பவற்றையும் இப்பிரதேச பள்ளிகளின் தலைவர்கள் மற்றும் நிறுவன தலைவர்கள், உறுப்பினர்களுக்கள், போன்ற முக்கியமான நபர்களிடம் நேர்காணல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டவை பண்பு சார் தரவுகள் தர்க்கரீதியாக் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேறுகளுக்கமைவாக இப்பகுதியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்க வாழ்வினை கட்டியெழுப்புவதற்கு பல்வேறுவிதமான முன்னேடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன் சமயக்கலந்துரையாடல்கள், சமூக சேவைகளை போன்ற பங்களிப்புகளையும் மேற்கொள்வதுடன் பல்வேறுபட்ட அரசியல், சமூக சவால்களையும் இந் நிறுவனவனங்கள் எதிர்நோக்குகின்றனர். இப்பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை நட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நிறுவனங்கள் பல்வேறுவிதமான பங்களிப்புகளை மேற்கொண்டு வந்தாலும் இப் பிரதேசத்தில் செயற்படும் இஸ்லாமிய நிறுவனங்களின் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்பட்டு வருகின்றதனை இவ்வாய்வினூடாக கண்டுகொள்ள முடிந்தது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7709
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Thought and Civilization

Files in This Item:
File Description SizeFormat 
Ed. Dissrt. Abstracts 47-48.pdf426.65 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.