<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/786</link>
    <description />
    <pubDate>Sat, 18 Apr 2026 12:38:54 GMT</pubDate>
    <dc:date>2026-04-18T12:38:54Z</dc:date>
    <item>
      <title>வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டில் ஒழுக்கம் சார் விழுமியங்களின் பங்களிப்பு (இடைநிலைப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/972</link>
      <description>Title: வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டில் ஒழுக்கம் சார் விழுமியங்களின் பங்களிப்பு (இடைநிலைப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
Authors: Soba, Balasundaram
Abstract: மனித விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் கல்வியின் பங்கு எந்தளவிற்கு முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றதோ, அந்தளவிற்குக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் மேம்மையடைய ஒழுக்கம்சார் விழுமியங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவுள்ளது. கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் சிறப்படைவதற்கு ஒழுக்கம் சார் விழுமியங்கள் எந்தளவிற்கு பங்களிப்புச் செய்கின்றது என்பதைக் கண்டறியும் பொருட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட மண்முனை தென்மேற்குப் பிரதேசம் ஆய்வுப் பிரதேமாக தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்திற்குட்பட்ட மாணவர்கள் இடம் பெயர்வினால் குறிப்பிட்ட காலங்களில் கல்வியைத் தொடர முடியாமல் முகாம்களில் தங்கியிருந்த காலப்பகுதியில் மாணவர்களிடத்தே வன்முறைகள், திருட்டு, பொய் கூறல் போன்றவாறான தீய நடத்தைகள் உருவானதோடு, இன்றும் காணக்கூடியதாகவுள்ளது. ஆய்வுக்குட்படுத்திய பாடசாலை மாணவர்களிடத்தே ஒழுக்கம் சார் விழுமியப் பண்புகள் எவ்வாறுள்ளது? மாணவர்களிடையே விழுமியப் பண்புகள் குறைவாகக் காணப்படுவதற்கான காரணங்கள், விழுமியப் பண்புள்ள மாணவர்கள் வகுப்பறையில் காணப்படும் போது எந்தளவிற்குக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் வெற்றியளிக்கின்றது, விழுமியப் பண்புகள் இல்லாத நிலையில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றை அறிந்து இவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் முகமாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளை ஆய்வு செய்தல், மாணவர்களின் இயல்புகள், நடத்தை (Behaviour) ஆகிய செயற்பாடுகளை விளக்குவதோடு, தரவுப்பகுப்பாய்வு முறையாக அதிகளவு பண்பறிசார் முறை பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் இவ்வாய்வானது விபரண ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகள் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து வினாக் கொத்து, நேர்காணல், அவதானம் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சார்பாக தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</description>
      <pubDate>Mon, 01 Jan 0003 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/972</guid>
      <dc:date>0003-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>முஸ்லிம்களின் திருமணத்தில் மஹரும், அன்பளிப்பும்: கல்முனைக்குடி பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு (Mahr and donation in Muslim marriage: a research based on Kalmunaikudy)</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/971</link>
      <description>Title: முஸ்லிம்களின் திருமணத்தில் மஹரும், அன்பளிப்பும்: கல்முனைக்குடி பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு (Mahr and donation in Muslim marriage: a research based on Kalmunaikudy)
Authors: Jazeel, M.I.M.; Rinosa, M.I.
Abstract: இலங்கை முஸ்லிம்களது திருமணத்தில் மஹரும் நன்கொடையும் பிரதானமான கூறுகள் என்பதற்கமைய கிழக்கிலங்கையின் கல்முனை முஸ்லிம்களது திருமணமும் மஹர், நன்கொடை ஆகிய அம்சங்களைக் கொண்டமைந்து காணப்படுகிறது. இஸ்லாமியத் திருமண நியமங்களுக்கேற்ப மஹர் திருமண ஒப்பந்தத்தின் பிரதான விடயங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனவே கல்முனை முஸ்லிம்களது திருமணத்தில் மஹர், நன்கொடை நடைமுறைகளை விபரித்தலையும் அந்நடைமுறைகளை இஸ்லாமிய நியமங்களோடு ஒப்பிடுதலையும் இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வில் அளவு சார், பண்பு சார் ஆகிய இரு ஆய்வு முறைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. நேர்காணல், வினாக்கொத்து, அவதானம், கலந்துரையாடல் ஆகிய வழிகளினூடாக பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. கல்முனை முஸ்லிம்களின் திருமணம் மஹரையும் ஒரு அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் மஹரின் தொகை மிகப் பெரும்பாலும், ஜம்பதுநாயிரத்துக்கும் உட்பட்டதாக அமைந்துள்ளது. மஹர் பணமாக அன்றி தங்கமாகவும் செலுத்தப்படும். மஹர் தொகையை நிர்ணயிக்கும் உரிமை மணப்பெண்ணிடம் இல்லை. மஹரை செலுத்தும் மணமகன் பெண் வீட்டிலிருந்து நன்கொடையைப் பெற்று மஹர் செலுத்துகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனவே, கல்முனை முஸ்லிம்களது மஹர், நன்கொடை நடைமுறைகள் இஸ்லாத்தின் இலட்சியம், நியமங்களைக் கருத்திற் கொண்டு அமைந்துள்ளது எனக்கூறுவதில் ஏற்பு நிலை இல்லை என்பவை இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும்.</description>
      <pubDate>Wed, 04 Mar 2015 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/971</guid>
      <dc:date>2015-03-04T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சி: எலமல்பொத பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/967</link>
      <description>Title: முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சி: எலமல்பொத பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு
Authors: Fathima Minsara, J.; Mazahir, S.M.M.
Abstract: பொதுவாக 1950 களுக்கு முன் ஆண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தல், எழுத்தறிவு மட்டும்&#xD;
பெண்களுக்குப் போதுமானது என்ற மனப்பான்மை போன்ற பல்வேறு காரணங்களினால்&#xD;
பெண்களுடையை கல்வி பின்தள்ளப்பட்டிருந்தது. 1950 இற்குப் பிற்பட்ட காலங்களிலேயே முஸ்லிம் பெண்கள் கல்வியைப் பெறத் தொடங்கினர். இதனடிப்படையில் எலமல்பொத பிரதேசத்திலும் பெண்கல்வி வளரத்தொடங்கியது. 1965களுக்குப் பின்னர் பெண்கள் பாடசாலைக்குச் சென்று பரவலாகக் கல்வி கற்கத் தொடங்கினர். அந்தவகையில் இப்பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியினை தற்போது நோக்கும் போது ஆண்களைவிட அதிகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு எலமல்பொத&#xD;
பிரதேச முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியை அறிந்து மதிப்பிடல், உயர் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான போதியளவு வளங்கள் காணப்படுகின்றனவா எனக் கண்டறிதல், உயர்கல்வியைத் தொடர்வதில் உள்ள சவால்கள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல் போன்றவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் எலமல்பொத முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முதல் முயற்சியாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சமூகவியல், பண்புசார் ஆய்வான இதில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்&#xD;
தரவுகளாக: ஆய்வுப் பிரதேசத்திலுள்ள உயர்கல்வி பெற்ற, பெறுகின்ற முஸ்லிம் பெண்களிடம் பெறப்பட்ட நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தகவல்கள்&#xD;
பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வு தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், அறிக்கைகள், பாடசாலைப் பதிவுத் திரட்டுப் புத்தகம் என்பன&#xD;
பயன்படுத்தப்பட்டுள்ளன.</description>
      <pubDate>Wed, 04 Mar 2015 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/967</guid>
      <dc:date>2015-03-04T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதில் இமாம் பதீஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸியின் சிந்தனைகள்: (ரஸாஇலுன் நூர் நூலை மையப்படுத்திய ஆய்வு)</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/918</link>
      <description>Title: முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதில் இமாம் பதீஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸியின் சிந்தனைகள்: (ரஸாஇலுன் நூர் நூலை மையப்படுத்திய ஆய்வு)
Authors: Habeebullah, M.T.; Munas, M.H.A.
Abstract: இளைஞர்கள் எனப்படுவோர் ஒரு தேசத்தின் மிகப் பெரிய பெறுமதி மிக்க சொத்தாக மதிக்கப்படுகின்றனர்.&#xD;
ஒரு நாட்டின் எதிர்கால மறுமலர்ச்சியின் பிரிக்கமுடியாத முதுகெலும்பாகவும் சமூக மாற்றத்தின்&#xD;
முன்னோடிகளாகவும் அவர்களே திகழ்கின்றனர். “முதியோர்கள் எனது பிரச்சாரப் பணியில் என்னைக்&#xD;
கைவிட்டபோது இளைஞர்களே எனக்கு கைகொடுத்து உதவினர் என்று முஹம்மது (ஸல்) அவர்கள்&#xD;
குறிப்பிட்டார்கள். 140உஸ்மானிய கிலாபத்தின் அந்திம காலப்பகுதியில் “துருக்கிய இளைஞர் இயக்கம்”&#xD;
என்றொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அது மதச்சார்பற்ற சிந்தனைகளையும் உஸ்மானிய கிலாபத்தை&#xD;
உடைப்பதற்கான நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து இளைஞர்களின்&#xD;
சிந்தனைகளில் பிழையான எண்ணக்கருக்கள் துருக்கியலும் அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியிலும்&#xD;
பரவலடைய ஆரம்பித்தது. இந்த வகையில் இன்றைய இளைஞர் சமூகத்திடையே பிழையான&#xD;
சிந்தனைகளும் பல வகையான சீரழிவுகளும் குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம்களைக் கொண்ட இலங்கை&#xD;
போன்ற நாட்டில் அவற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதை அவதானிக்கலாம்.&#xD;
“போதை வஸ்த்துப் பாவனை போன்ற நடவடிக்கைகளின் விளைவால் அவர்களில் பெருந்தொகையானோர்&#xD;
சிறைகளிலும் சீர்திருத்த முகாம்களிலும் புனர்வாழ்வு வழங்கப்படுவதையும் மீள்பார்வை என்ற பத்திரிகை&#xD;
சுட்டிக்காட்டிசெய்தியினை வெளியிட்டிருந்தது”. 141 இத்தகைய இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான&#xD;
சிந்தனைகள் பல மட்டங்களில் பேசப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இளைஞர்களின்&#xD;
சமகாலத்தின் தேவைகளை உணர்ந்து அவர்களின் அறிவு மட்டங்களை தட்டியெழுப்பும் பாங்கிலும்&#xD;
தத்துவாத்த ரீதியிலும் அணுகும் முயற்சிகள் மிக அரிதாகவே காணப்படுகிறது. எனவேää இந்த ஆய்வு இமாம்&#xD;
பதீஉஸ் ஸமான் நூர்ஸியின் “ரஸாஇலுன் நூர்” இன் ஒரு தலைப்பான “மறுமையின் வெற்றியை நோக்கிய&#xD;
இளைஞர்களுக்கான வழிகாட்டி” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கின்றது. இமாம்&#xD;
பதீஉஸ் ஸமான் நூர்ஸி நவீன இஸ்லாமிய முன்னோடிகளில்துருக்கியை பிறப்பிடமாக கொண்ட&#xD;
குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமை. இலங்கை போன்ற நாட்டில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை&#xD;
சீரழிவிலிருந்து பாதுகாக்க இமாம் அவர்கள் முதன்மைப்படுத்தி; முன்மொழிந்துள்ள விடயங்களை அதன்&#xD;
சாத்தியப்பாடு தொடர்பாக இவ்வாய்வு அலசுகிறது. எனவே, இவ்வாய்வு முதலாம் நிலைத் தரவுகள்&#xD;
இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகியவற்றை ஆய்வு மூலங்களாகக் கொண்டு பண்புசார் பகுப்பாய்வு முறையில்&#xD;
மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையிலுள்ள இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கு இமாம்&#xD;
நூர்ஸியின் சிந்தனை அரபுலக முன்னோடிகளைக் காட்டிலும் சாலப்பொருத்தமானதாக அமையும் என்பதை&#xD;
பல நியாயப்படுத்தல்களுடன் இவ்வாய்வு முன்வைக்கிறது.</description>
      <pubDate>Wed, 04 Mar 2015 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/918</guid>
      <dc:date>2015-03-04T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

