<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection: December 2019</title>
    <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5054</link>
    <description>December 2019</description>
    <pubDate>Tue, 14 Apr 2026 22:43:58 GMT</pubDate>
    <dc:date>2026-04-14T22:43:58Z</dc:date>
    <item>
      <title>பிரபஞ்சக் கோட்பாட்டின் பன்முகத் தன்மை: மெய்யியல் ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5065</link>
      <description>Title: பிரபஞ்சக் கோட்பாட்டின் பன்முகத் தன்மை: மெய்யியல் ஆய்வு
Authors: றியால், ஏ.எல்.எம்.
Abstract: பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகள் ஆரம்பகாலம் முதலே ஆரம்பித்து விட்டன. பிரபஞ்சத்தின் இருப்பு,&#xD;
அதன் தோற்றம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த சிந்தனைகள் பல்வேறு காலகட்டங்களில்&#xD;
பல்வேறு துறையினரால் பல கோட்பாடுகளாக முன்வைக்கப் பட்டிருக்கின்றன. இவைகள்&#xD;
தொன்மம் சார்ந்தவைகளாகவும், சமயம் சார்ந்தவைகளாகவும், மெய்யியல் விளக்கங்களாகவும்,&#xD;
விஞ்ஞானக்கோட்பாடுகளாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் தோற்றம், வரலாறு குறித்த சமய&#xD;
விளக்கங்களில் பலவிதமான கடவுளின் செயற்பாடுகள் மையப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது&#xD;
தொடர்பான கிரேக்கர்களின் விளக்கங்கள் ஒரளவு நடுநிலையானதாகவும் பௌதீக&#xD;
அடிப்படையிலும் அமைந்திருக்கின்றன. தற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற&#xD;
விண்வெளி ஆய்வுகள், அதன் இயக்கம் மற்றும் சார்பியல் கொள்கைகளில் ஏற்பட்ட&#xD;
முன்னேற்றங்கள் காரணமாக பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்&#xD;
பெற்றிருக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான விளக்கங்களும் மெய்யியல் விளக்கங்களும் மாற்றங்கள்&#xD;
நிறைந்ததாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான விளக்கங்கள் பன்முகத் தன்மையான&#xD;
பல்வேறுவகையான விளக்கங்களாக அமையப்பெறினும் ஆழமாகப் பார்க்கையில்&#xD;
அவைகளுக்கிடையில் ஒரு ஒருமித்ததன்மை காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.&#xD;
இவ்வொருமித்த தன்மையினை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கான&#xD;
தரவுகள் தலைப்புத் தொடர்பான தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள், கலைக் களஞ்சியங்கள்,&#xD;
அகராதிகள், முனைவர் பட்ட ஆய்வேடு போன்றவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளதுடன்&#xD;
இவ்வாய்விற்கான முறையியலாக பகுப்பாய்வு மற்றும் ஒப்பீட்டு முறையியல்கள் பயன்படுத்தப்பட்&#xD;
டிருக்கின்றன.</description>
      <pubDate>Sun, 01 Dec 2019 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5065</guid>
      <dc:date>2019-12-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>விஞ்ஞான அறிவை நியாயப்படுத்துவதில்; முறையியல்: ஒரு நோக்கு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5064</link>
      <description>Title: விஞ்ஞான அறிவை நியாயப்படுத்துவதில்; முறையியல்: ஒரு நோக்கு
Authors: கணேசராஜா, எ.
Abstract: இயற்கை சமூக விஞ்ஞானங்களில் ஆய்வும், ஆய்வு முறையியலும் முக்கியமானதாகும்.&#xD;
மெய்மையினைக் கண்டறியும் ஒரு அணுகுமுறையே ஆய்வு எனலாம். இத்தகைய ஆய்வு எப்படி&#xD;
அமையவேண்டும் என்பதை நெறிப்படுத்துவதில் ஆய்வு முறையியல் மிகவும் முக்கியமானதாகும்.&#xD;
ஆய்வுத்துறை எதுவாயினும் அதன் விஞ்ஞான பெறுமானத்தினைத் தீர்மானிப்பது&#xD;
முறையியலாகும். விஞ்ஞான அறிவை தர்க்கரீதியாக நியாயப்படுத்துவதே ”விஞ்ஞானமுறையியல்‟&#xD;
எனப்படும். இவை விஞ்ஞானத்திற்கு அவசியமானதும் இன்றியமையாததுமாகும். பொதுவாகவே&#xD;
இயற்கை விஞ்ஞானத்தில் அறிவு என்பது மாறிமாறியுள்ளதை அவதானிக்கலாம். விஞ்ஞான&#xD;
முறையியல் பற்றிய தேடலில் மெய்யியலாளர்களும், அளவையியலாளர்களும் கூடியளவு&#xD;
பங்களிப்புச் செய்துள்ளார்கள். இவ்வாறான முறையியலானது விஞ்ஞானத்தின் வரலாற்றில்&#xD;
வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மெய்யியலாளர்களினால் வெவ்வேறு முறையியல்கள்&#xD;
முன்வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம். முறையியலானது ஆரம்பத்தில் இருந்து&#xD;
இன்றுவரை மாற்றமடைந்து வந்திருப்பதனை அறியலாம். அந்தவகையில் கிரேக்க அறிஞரான&#xD;
அரிஸ்ரோட்டிலினது உய்த்தறிமுறையும், பிரான்ஸிஸ் பேகனின் தொகுத்தறிமுறையும், கார்ள்&#xD;
பொப்பரின் பொய்ப்பித்தல் முறையும், தோமஸ் கூனின் சார்புவாத முறையும் முக்கியமான&#xD;
முறையியல்களாக எடுத்தாளப்படுகின்றன. இவ் ஆய்வானது இரண்டாம் நிலை ஆய்வாகவுள்ள&#xD;
தால் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதோடு விபரிப்பு முறை,&#xD;
விளக்கமுறை, மதிப்பீட்டு முறைகளைக் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது..வெவ்வேறு&#xD;
முறையியல்கள் விஞ்ஞானத்தில் மாறிமாறிக் கையாளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூறும்&#xD;
அதேவேளை பயராபண்ட், லக்காடோஸ் போன்றோரின் விமர்சனங்களும் முக்கியமாக&#xD;
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</description>
      <pubDate>Sun, 01 Dec 2019 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5064</guid>
      <dc:date>2019-12-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>இலங்கை - சீன வெளியுறவில் இருபத்தியோராம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதை திட்டம்: கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியும் ஹம்பாந்தோட்ட அபிவிருத்தியும்</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5063</link>
      <description>Title: இலங்கை - சீன வெளியுறவில் இருபத்தியோராம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதை திட்டம்: கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியும் ஹம்பாந்தோட்ட அபிவிருத்தியும்
Authors: பௌசர், எம்.ஏ.எம்.
Abstract: கோள அமைவிடம் காரணமாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளில் இலங்கை&#xD;
முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் வெளிநாடுகள்&#xD;
இலங்கையுடனான உறவினை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவந்திருப்பதனை அவதானிக்க&#xD;
முடிகின்றது. சுதந்திரத்திற்கு பிந்திய தசாப்தங்களில் பிரித்தானியா, இந்தியா, சீனா, ஐக்கிய&#xD;
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கையுடன் வலுவான உறவுகளைப் பேணிவந்துள்ளன. அணிசேரா&#xD;
இயக்கத்தின் உருவாக்கத்தில் இலங்கை முதன்மை பங்காளராக இருந்தது. சிவில் யுத்த&#xD;
காலப்பகுதியில் இலங்கை பல்வேறு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டது. மிக&#xD;
அண்மைய தசாப்தங்களில், குறிப்பாக மஹிந்த ராஜபக்~வின் ஆட்சிக் காலத்தில் சீனாவுடனான&#xD;
இலங்கையின் வெளியுறவுகள் வலுவடைந்திருந்தன. இதன்போது இந்தியா மற்றும் அமெரிக்கா&#xD;
உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அதிருப்தி கொண்டிருந்தன.&#xD;
2015இல் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதார கூட்டணிகள்&#xD;
மாற்றியமைக்கப்பட்டன. இலங்கையில் பல சீன முதலீட்டுத் திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.&#xD;
அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் இந்தியாவும்&#xD;
இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு பொருளாதார மேம்பாட்டு உதவிகளை வழங்கியது. எனினும்&#xD;
குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் இலங்கை சீனாவுடனான தனது உறவை மீண்டும் புதுப்பித்து,&#xD;
இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் கட்டுமானப் பணிகளையும் மீளத்&#xD;
தொடங்கியது. இவ்வாறு இலங்கை ஒரு நாட்டுடன் மட்டும் நிலையானதும் தீர்க்கமானதுமான&#xD;
உறவினைக் கொள்ளாது, பொருளாதார மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு வெளிநாட்டு&#xD;
உதவிகளுக்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுடன் தனது வெளியுறவினைப் பேணிவந்துள்ளது.&#xD;
இந்நிலையில் இலங்கையின் சீனாவுடனான உறவுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை&#xD;
சீனாவின் மிகப் பெரிய முதலீட்டு திட்டமாக விளங்குகின்ற, இருபத்தியோராம் நூற்றாண்டின் கடல்சார்&#xD;
பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. இக்கட்டுரையில்&#xD;
கொழும்பு துறைமுக நகரத்திட்டமும் ஹம்பாந்தோட்ட அபிவிருத்தித் திட்டமும் கவனத்திற்&#xD;
கொள்ளப்பட்டு, இலங்கைக்கு சீனா வழங்கிவரும் பொருளாதார மேம்பாட்டு உதவிகளின்&#xD;
முக்கியத்துவம் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் முன்னர்&#xD;
வெளியிடப்பட்ட பல்வேறு கட்டுரைகள் மற்றும் ஆவணங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.</description>
      <pubDate>Sun, 01 Dec 2019 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5063</guid>
      <dc:date>2019-12-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>மேலைத்தேய மெய்யியல் பாரம்பரியத்திற்கான ‘சோஃபிஸவாதிகளின் பங்களிப்பு’: ஓர் மெய்யியல் பார்வை</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5062</link>
      <description>Title: மேலைத்தேய மெய்யியல் பாரம்பரியத்திற்கான ‘சோஃபிஸவாதிகளின் பங்களிப்பு’: ஓர் மெய்யியல் பார்வை
Authors: நேசன், புலேந்திரன்
Abstract: இவ் ஆய்வானது கிரேக்கத்தின் முக்கிய சிந்தனைச் செயற்பாட்டாளர்களான&#xD;
சோபிஸவாதிகளினால் மேலைத்தேய மெய்யியல் அறிவுப் பாரம்பரியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட&#xD;
பங்களிப்புக்கள் தொடர்பாக ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. ஆதி&#xD;
கிரேக்கத்திலே தோன்றிய மேலைத்தேய மெய்யியல் சிந்தனைகள் பிரபஞ்சவியல் (Cosmology)&#xD;
பற்றிய அறிவாராய்ச்சியினை மேற்கொள்ள, அதனைத்தொடர்ந்து உருவான சோபிஸ&#xD;
சிந்தனையானது „மனிதனை‟ முக்கியப்படுத்தியமையினால் இவர்களது சிந்தனைகளைப் புரிந்து&#xD;
கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் காணப்பட்ட சிக்கல்தன்மை இவ் ஆய்வின் பிரச்சினையாக&#xD;
காணப்படுகின்றது. உண்மை அறிவினை புலக்காட்சி அனுபவமூடாக ஏற்றுக்கொண்டனர்,&#xD;
மனிதனை மையப்படுத்தியவகையிலான கல்வி, அறிவுப் பாரம்பரியத்தை யதார்த்த பூர்வமாக&#xD;
மேற்கொண்டனர் போன்றன இவ் ஆய்வின் கருதுகோள்களாகக் காணப்படுகின்றன. இவ்&#xD;
ஆய்வுக்கான தரவுகள் பிரதானமாக இரண்டாம் நிலைத் தரவு மூலங்களான முன்னர்&#xD;
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றினூடாக&#xD;
சேகரிக்கப்பட்டதோடு, விபரணப் பகுப்பாய்வு, விமர்சன ஆய்வு முறை போன்ற ஆய்வு&#xD;
முறைமைகளைப் பயன்படுத்துகின்றது. சோபிஸ்டுகளின் செயற்பாட்டினால் புதியதோர் சிந்தனை&#xD;
வளர்ச்சிப் போக ;கானது மெய்யியல் வளர்ச்சியில் ஏற்பட்டது. இதுவரை காலமும் பிரபஞ்சவியல்&#xD;
ஆய்வினை முக்கியப்படுத்திய கிரேக்க மெய்யியலாளர்கள் அதிலிருந்து விடுபட்ட மனிதனை&#xD;
மையப்படுத்திய ஆய்வுகளை முன்னெடுக்கவும், பிற்காலத்தில் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ,&#xD;
அரிஸ்ரோட்டில் போன்று பலரும் தமது ஆய்வுகளில் அறிவார்வத்தினை வெளிப்படுத்தவும்,&#xD;
இன்றுவரையும் வாதப்பிரதிவாதங்களுடன், பகுத்தறிவினை நடைமுறை ரீதியில் பயன்படுத்தவும்&#xD;
சோபிஸ்டுகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.</description>
      <pubDate>Sun, 01 Dec 2019 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5062</guid>
      <dc:date>2019-12-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

