<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection: This is the proceedings of 6th International Symposium held on 20 -21 December, 2016 at the South Eastern University of Sri Lanka</title>
    <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1939</link>
    <description>This is the proceedings of 6th International Symposium held on 20 -21 December, 2016 at the South Eastern University of Sri Lanka</description>
    <pubDate>Thu, 23 Apr 2026 00:56:35 GMT</pubDate>
    <dc:date>2026-04-23T00:56:35Z</dc:date>
    <item>
      <title>விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2492</link>
      <description>Title: விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு
Authors: Nirosan, Sivakumar
Abstract: சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் ஒரு தனிமனித ஆளுமை எவ்வாறு&#xD;
கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வரையறைகளை பாரத தேசத்திற்கு மட்டுமன்றி முழு&#xD;
உலகத்திற்குமாக பறைசாற்றி நிற்கின்றன. ஆளுமை குறித்து விளக்கமுற்பட்ட மேலைத்தேய&#xD;
சிந்தனையாளர்கள் ஆளுமை குறித்து பல்வேறுபட்ட கருத்தாக்கங்களை வெளிப்படுத்தி நின்றனர். சிக்மண்ட்&#xD;
புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும்&#xD;
ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றனர்.சுவாமி விவேகானந்தர் இவை&#xD;
யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது&#xD;
ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார்.ஒருவரது ஆளுமையைத்&#xD;
தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள்&#xD;
செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும்&#xD;
தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவரது உள்ளத்திலே புதைந்து கிடக்கின்ற ஆன்மபலமே ஒருவனை&#xD;
உயர்வடையச் செய்கின்றது. அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார்.&#xD;
ஒவ்வொருவரும் தமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் ஓங்கச் செய்ய வேண்டும் என&#xD;
வலியுறுத்தினார். மேலும் ஒருவனது சிந்தனைகளும், செயல்களுமே அவனது நிகழ்காலத்தையும்,&#xD;
எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டினார். எனவே சிந்தனைகளும், செயல்களும்&#xD;
சரியானதாகவும், தெளிவானதாகவும், வலுவானதாகவும் அமைகின்ற போது ஒரு மனிதன் சிறந்த&#xD;
ஆளுமைமிக்க மனிதனாக உருவாகின்றான் என்பதனை எடுத்துக் காட்டியதோடு, சிறந்த ஆளுமை மிக்க&#xD;
தனிநபர்களின் உருவாக்கம், சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு&#xD;
வழிவகுக்கும் என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.இத்தகைய கால வரம்பிற்குட்படாத&#xD;
தீர்க்கதரிசனத்தைக் கொண்ட விவேகானந்தரது ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகால உலகிலும் மிகவும்&#xD;
தேவைப்பாடுடையனவாய் விளங்குகின்றன. இன்றைய உலகில் ஆளுமை என்பது குறித்து காணப்படுகின்ற&#xD;
தவறான புரிந்து கொள்ளல்களில் இருந்து விடுபட்டு, உண்மையான சிறந்த ஆளுமை குறித்த&#xD;
விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் வித்திடுகின்றன&#xD;
என்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது.இவ் ஆய்வுக்குரிய தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளில்&#xD;
இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல்,&#xD;
விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</description>
      <pubDate>Tue, 20 Dec 2016 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2492</guid>
      <dc:date>2016-12-20T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>அரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014)</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2491</link>
      <description>Title: அரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014)
Authors: பிரசாத், சி.; கணேசலிங்கம், கே.ரீ.
Abstract: இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றம் 1930களின் பிற்பகுதியிலேயே&#xD;
ஆரம்பமாகின்றது. டொனமூர் அரசியற் திட்டத்தின் சர்வஜன வாக்குரிமையின் விளைவு காரணமாக&#xD;
அரசியற் கட்சிகள் உருவாவதற்கான அடித்தளத்தினை இட்டன. முதலில் இடதுசாரிக் கட்சிகளே&#xD;
தோற்றம் பெற்றன. பின்னர் காலனித்துவ அரசிடம் இருந்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளும்&#xD;
நோக்கோடு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியில் ஏற்பட்ட&#xD;
தலைமைத்துவ முரண்பாடு காரணமாக S.W.R.D.பண்டாரநாயக்கா இக்கட்சியில் இருந்து விலகி&#xD;
சிங்கள மகாசபை மூலமும், பௌத்த மத தேசியவாதிகளின் ஆதரவோடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி&#xD;
தோற்றம் பெற்றது. 1956ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்&#xD;
காரணமாகவும் மற்றும் பௌத்த மதத்தின் ஆதரவின் மூலம் இனவாத அரசியல் எழுச்சியுற்றும் மொழி,&#xD;
மதம் என்பன அரசியல் மயமாக்கப்பட்டதோடு பிற்பட்ட காலத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு&#xD;
அரசாங்க நிறுவனங்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி&#xD;
அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத அரசியலுக்கு ஆதரவு வழங்கியிருந்ததோடு&#xD;
இவ்விரு கட்சிகளினால் உருவாக்கப்பட்ட யாப்புக்களில் பௌத்த மதம் அரச மதமாக&#xD;
அங்கீகரிப்பட்டிருந்தது. மேலும் பௌத்த பீடங்களின் செல்வாக்கு கட்சியின் அரசியலினை&#xD;
தீர்மானிப்பதாக அமைந்ததோடு இலங்கையின் அரசியல் கட்சிகளில் மதம் பிரிக்க முடியாத ஓர்&#xD;
அம்சமாக விளங்கியது எனலாம். இலங்கையானது பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடு ஆகும்.&#xD;
இங்கு பல இனத்தவர்கள் வாழ்;வதோடு அவர்கள் பல மொழி பேசுபவர்களாகவும், பலவகையான சமய&#xD;
நம்பிக்கை மற்றும் பாரம்பரிய கலாசார மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த போதிலும்&#xD;
இலங்கை அரசியலில் மதவாதம் தலைதூக்கும் தன்மையானது இனங்களுக்கிடையான ஒற்றுமையினை&#xD;
சீர்குலைப்பதாக அமைவதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மதமாக பௌத்தம் இருந்த போதிலும்&#xD;
இந்து, இஸ்;லாம், கிறிஸ்தவ மதங்களின் சுதந்திரத்தில் பௌத்த தேசியவாதக் குழுக்களும் மற்றும்&#xD;
அவை சார்ந்த கட்சிகளும் தலையிடுகின்ற தன்மையானது சமாதான செயன்முறைகளுக்கும், மத&#xD;
சுதந்திரத்திற்கும் தடையாக அமைவதோடு மட்டுமன்றி மத வன்முறைகளுக்கான காரணியாகவும்&#xD;
விளங்குகின்றது. இந்த பின்னணியில் இவ் ஆய்வானது அரசியல் கட்சிகளில் மதக் காரணிகளின்&#xD;
செல்வாக்கினை இலங்கையை மையமாகக் கொண்ட ஆய்வு செய்வதாக அமைகின்றது. இவ்&#xD;
ஆய்வானது முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையமாகக் கொண்டும், கட்சிக்&#xD;
கோட்பாடு மதச்சார்பின்மை கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டும் வரலாற்று அணுகுமுறை&#xD;
ஒப்பீட்டு அணுகுமுறையின் மூலம் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது.</description>
      <pubDate>Tue, 20 Dec 2016 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2491</guid>
      <dc:date>2016-12-20T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அமுலாக்கமும் அதன் நடைமுறைகளும்: ஓர் ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2490</link>
      <description>Title: பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அமுலாக்கமும் அதன் நடைமுறைகளும்: ஓர் ஆய்வு
Authors: நிதிஹரன், கந்தசாமி
Abstract: பாடசாலைகளில் ஆசிரிய வாண்மைசார் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உரிய&#xD;
பயன்தரவில்லை என்ற குறைபாட்டை களையும் முகமாகவும் தரமான ஆசிரியர் அபிவிருத்தியை&#xD;
ஏற்படுத்துவதற்கும் என அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி&#xD;
நிகழ்ச்சித் திட்டமாகும். (School Based Teachers’ Development – SBTD) இத்திட்டத்தின் மூலம்&#xD;
ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்குத் தேவையான விடயங்களை பாடசாலை மட்டத்திலே அதிபர்&#xD;
கண்டறிந்து பொருத்தமான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கு இதன் மூலம் வகை&#xD;
செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் எதிர்பார்க்கும் நோக்கங்களாக, பாடசாலை மட்ட ஆசிரிய&#xD;
அபிவிருத்தி செயற்றிட்டத்தில் உள்ள அம்சங்களை இனங்காணல், அதற்கான வளங்களை&#xD;
இனங்காணல் மற்றும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டதினை&#xD;
நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகளின் செயற்பாடுகள் கண்டறிதல் என்பனவாகும். இவ்வாய்வின்&#xD;
ஆய்வுப் பிரச்சினையாக பாடசாலைகளுக்கு நேரடியாக நிதி; கையளிப்புச் செய்யப்படுகின்ற போதும்&#xD;
அதனைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகள் சரியான கொள்கையின் கீழ்&#xD;
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன. மட்டக்களப்பு&#xD;
மாவட்டத்தில் உள்ள கோறளைப்பற்றுப் பிரதேசம் ஆய்வுக்குரிய பிரதேசமாகும். கோறளைப்பற்றுப்&#xD;
பிரதேசத்தில் உள்ள 15 அரச பாடசாலைகளில் 1AB,1C,Type-II வகையைச் சேர்ந்த ஏழு&#xD;
பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கிய மீளாய்வுக்கு பாடசாலை மட்ட ஆசிரிய&#xD;
அபிவிருத்தி தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கல்வி அமைச்சின் பிரதான வெளியீடு&#xD;
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான கல்வி அமைச்சின் சுற்று&#xD;
நிருபங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாய்வு ஒரு கள ஆய்வாக அமைந்துள்ளது. அளவுசார்&#xD;
ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விலே வினாக்கொத்து மூலம் பெறப்படும்&#xD;
தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி கோறளைப்பற்றுப் பிரதேசப்&#xD;
பாடசாலைகளில் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை&#xD;
நடைமுறைப்படுத்துவதில் 53மூஆசிரியர்களின் கருத்துபடி அதற்கான வளங்கள் போதுமானதாகக்&#xD;
கிடைப்பதில்லை. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவற்கு உரிய செயற்பாடுகள் பாடசாலைகளில்&#xD;
66மூஆசிரியர்களின் கருத்துப்படி பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. ஆசிரியர்களின்&#xD;
உண்மையான தேவைப்பாடுகள் இனங்காணப்படுதல், ஆசிரியர்கள் பங்குபற்றுதலுக்கான வாய்ப்பு,&#xD;
கல்விக் கோட்டங்கள் மற்றும் வலயங்களின் கண்காணிப்பு போன்றவை மிகவும் மோசமான நிலையில்&#xD;
இருப்பதை இவ்வாய்வு மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பெரும்பான்மையான ஆசிரியர்களின்&#xD;
கருத்துப்படி இந்நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான பாடசாலை மட்டத்திலான&#xD;
செயற்பாடுகள் வீழ்ச்சியான நிலையில் இருப்பதையே காட்டி நிற்கின்றது.</description>
      <pubDate>Tue, 20 Dec 2016 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2490</guid>
      <dc:date>2016-12-20T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>Importance of revealing the value of pre - Islamic period's Arabic proverbs through translating into Tamil language</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2489</link>
      <description>Title: Importance of revealing the value of pre - Islamic period's Arabic proverbs through translating into Tamil language
Authors: Safiullah, M.I.M.; Razeek, A.M.</description>
      <pubDate>Tue, 20 Dec 2016 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2489</guid>
      <dc:date>2016-12-20T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

