<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5451" />
  <subtitle />
  <id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5451</id>
  <updated>2026-04-15T02:32:31Z</updated>
  <dc:date>2026-04-15T02:32:31Z</dc:date>
  <entry>
    <title>ஓய்வு நேரம் மீதான முஸ்லிம் பெண்களின் ஈடுபாடும் அவை குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்தும் தாக்கமும்: சம்மாந்துறை பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7712" />
    <author>
      <name>Hakeema Beevi, S. M.</name>
    </author>
    <id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7712</id>
    <updated>2026-02-23T07:29:06Z</updated>
    <published>2024-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: ஓய்வு நேரம் மீதான முஸ்லிம் பெண்களின் ஈடுபாடும் அவை குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்தும் தாக்கமும்: சம்மாந்துறை பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு
Authors: Hakeema Beevi, S. M.
Abstract: மனித வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் நேரத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளன. மனிதன் தனது ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் இழைப்பாறுவதற்காகவும் காலத்தின் ஒரு பகுதியை ஓய்வுக்காக ஒதுக்கிக்கொள்கிறான். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் பின்னணியில் ஓய்வு நேரத்தை கழிப்பதெற்கென பல்வேறான பொழுதுபோக்கு விடயங்கள் வளர்ந்து வருவதுடன் அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளன. இந்நிலை முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஊடுறுவியுள்ளது. சில நேரங்களில் இஸ்லாமிய வரையறைகளை தாண்டிய   பொழுதுபோக்கு விடயங்கள் குடும்பத்தில் பல பிரச்சினைகளுக்கும் வித்திடுகின்றன. இந்தவகையில் ஓய்வுநேரத்தை கழிப்பதில் சம்மாந்துறை பிரதேச முஸ்லிம் இல்லத்தரசிகள் கொண்டுள்ள  ஈடுபாட்டினை கண்டறிந்து அவை குடும்ப கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை ஆராயும் நோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அளவு சார் முறையியலைக் கொண்டு முதலாம் நிலைத் தரவுகளுக்காக சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராம சேவக பிரிவுகளில் வாழும் (1541) முஸ்லிம் குடும்பங்களில் 135 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரம் எழுமாற்று விகிதத்தில் தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் கையளிக்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் அவை விபரிப்பு புள்ளி விபரியல் மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகமாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள்,  சஞ்சிகைகள், இணையத்தளம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆவணங்கள் என்பன இரண்டாம் நிலைத்தரவுகளாக  சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வின் கண்டுபிடிப்புக்களாக, முஸ்லிம் பெண்கள் ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி, இணையத்துடன் ஈடுபடல், இசை, சமயலில் ஈடுபடல், வாசிப்பு மற்றும் எழுத்துருவாக்கம் போன்ற உட்புற செயற்பாடுகளிலும் சுற்று சூழலுடனான தொடர்பு, உடற்பயிற்சி, உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் உரையாடுதல்,குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருத்தல்,வீட்டுத்தோட்டம் போன்ற வெளிப்புற செயற்பாடுகளிலும் குர்ஆன் ஓதுதல், மனனம், அழைப்பு பணியில் ஈடுபடல், சுன்னத்தான விடயங்கள் மற்றும் மார்க்க விடயங்கள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய கலாசார விடயங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.  இருப்பினும், தொலைக்காட்சியுடனான ஈடுபாடு, இணையப்பாவனை, வீணான உரையாடல் என்பன உயர்வான ஈடுபாடுகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் குடும்பத்தில் பிள்ளைகளின் கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போன்ற விடயங்கள் கவனிக்கப்படாமை, கணவன்-மனைவி உறவில் விரிசல், வீட்டுக்கடமைகள் முறையாக நிறைவேற்றுப்படாமை,  வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான சூழல் காணப்படாமை இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளுக்கு முறணான  சூழல் காணப்படல் போன்ற விடயங்கள் முஸ்லிம் பெண்களின் ஓய்வு நேர செயற்பாடுகளினால் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்களாக கண்டறியப்பட்டுள்ளதுடன் ஆய்வின் முடிவில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளும் எதிர்கால ஆய்வுகளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.</summary>
    <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் யாசகமும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் : மருதமுனைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7711" />
    <author>
      <name>Saheela, M. A. B.</name>
    </author>
    <id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7711</id>
    <updated>2026-02-23T07:24:29Z</updated>
    <published>2024-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் யாசகமும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் : மருதமுனைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
Authors: Saheela, M. A. B.
Abstract: இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் ஒன்று தான் யாசகம். எம் நாட்டில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் போன்ற நான்கு இனத்தவர்கள் காணப்படுகின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்திலேயே அதிகளவான யாசகர்கள் காணப்படுகின்றனர். யாசகத்தை தடுத்தும் ஊழியத்தை ஊக்குவிப்பதிலும் பல்வேறு வகையான அல்குர்ஆன் ஹதீஸ்கள் வந்துள்ள போதிலும் அது பற்றிய அறியாமை மற்றும் பயமின்மை போன்ற காரணங்களினால் யாசகம் குறைந்த நிலையை காணவில்லை. அதனால் ஏற்படுகின்ற தாக்கங்களும்’  மருதமுனை பிரதேசத்தினை மையப்படுத்திய இவ்வாய்வானது யாசகத்தினால் ஏற்படும் வணக்க வழிபாடுகளிற்கான தடைகள், சிறுவர்கள், இளம் பெண்கள் யாசகம் கேட்பதானால் ஏற்படும் விளைவுகள், பொய்யான யாசகத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழிவுகள் போன்றனவற்றை ஆராய்வதே ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. மேலும் இவ்வாய்வின் நோக்கங்களாகமுஸ்லிம் சமூகத்தில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வாறுள்ளது என்பதை அடையாளம் காணுவதும் இவ்யாசகத்தினால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை நோக்குவதுமாக உள்ளது. இவ்வாய்விற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி தகவல்கள் பெறப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக நேரடி மற்றும் மறைமுக அவதானங்களும் நேர்காணல்களும் காணப்படுகின்றன. எளிய எழுமாற்று முறை மூலமும் 29 பேர் தெரிவு செய்யப்பட்டு 20 வினாக்களை கொண்ட நேர்காணல் இடம் பெற்று அதன்மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பின்னணியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவுகள் கல்முனை மாநகர சபையில் பெறப்பட்ட மருதமுனைப் பிரதேசத்தின் சனத்தொகை பரம்பல், பொருளாதாரம் என்பனவற்றை , அடிப்படையாகக்கொண்ட புள்ளிவிபரங்கள் என்பனவற்றினூடாகவும் இணையத்தளம், நூல்கள் என்பவற்றின் மூலமும் பெறப்பட்டன. மேற்கூறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வானது ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு யாசகம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புக்கள் ஆய்வின் கருதுகோளுடன் தொடர்புபட்ட தகவல்களை அடிப்படையாயாகக் கொண்டவையாகவே உள்ளன. இவ்வாய்வின் மூலம் முஸ்லிம் சமூகத்தில் யாசகம் அதிகரிக்கின்றது என்றும் அதனால் முஸ்லிம் சமூகமானது பல்வேறு பாதகமான விளைவுகளையும் கண்டு வருகின்றமை குறித்த தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது  இவ்வாய்வின் மூலம் யாசகம் பெறுவது அதிகரிப்பதற்கான காரணங்களை அலசப்பட்டுள்ளதுடன் யாசக அதிகரிப்பு வீதமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது எந்தளவு சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதை கணிப்பிடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யாசகர்களின் வருகை விபரம், சமூகக் கட்டமைப்பில் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகள், யாசகர்களின் உளச் சிந்தனை, யாசக ஒழிப்பில் ஸகாத் நிதியத்தின் வகிபாகம், வறுமை ஒழிப்பிற்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்பவைகள் அவதானிப்புக்கள் மற்றும் நேர்காணல் பெறப்பட்வை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் யாசக ஒழிப்பிற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் யாசக ஒழிப்பானது பெரும் சவாலான விடயமாகவே உள்ளது. எனவே கருதுகோளினை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வாய்வானது சிறப்புற அமைய எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்விலிருந்து யாசகம் முஸ்லிம் சமூகத்தில் அதிகரிக்கிறது என்பதும் அதனால் சமூகம் பாரிய விளைவுகளை எதிர்நோக்குகின்றது என்பதும் ஓரளவு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</summary>
    <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>இலங்கையில் ஹிஜாப் பற்றிய முஸ்லிமல்லாதோரின் பார்வை: அம்பாரை மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு.</title>
    <link rel="alternate" href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7710" />
    <author>
      <name>Nifra, A. W. F.</name>
    </author>
    <id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7710</id>
    <updated>2026-02-23T07:19:38Z</updated>
    <published>2024-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இலங்கையில் ஹிஜாப் பற்றிய முஸ்லிமல்லாதோரின் பார்வை: அம்பாரை மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு.
Authors: Nifra, A. W. F.
Abstract: இவ்வாய்வு இலங்கையில் ஹிஜாப் பற்றிய முஸ்லிமல்லாதோரின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை பரிசீலித்து பார்பதை நோக்காக கொண்டுள்ளது. இந்நோக்கத்தை அடைந்து கொள்ளும் முகமாக 200 வினாக்கொத்துக்களை அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்கள - பெளத்த மக்களுக்கு விநியோகித்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு இரண்டாம் நிலைத் தரவுகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி தரவுகள் SPSS மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டன. முடிவுகளின் படி பெரும்பாண்மையான பங்குபற்றுனர்கள் ஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், ஹிஜாப் பெண்னை அடிமைப்படுத்துவதாகவும் கருதுகின்றனர். எனினும் ஹிஜாப் ஆண்களின் தீங்கான பார்வையில் இருந்து பெண்னைப் பாதுகாக்கின்றது. கருதுகின்றனர். இவ்வாறாக ஆய்வுச் சுருக்கம் காணப்படுகின்றது எனலாம்.</summary>
    <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில்; இஸ்லாமிய நிறுவனங்களின் பங்கிளப்பு -வாழைச்சேனை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு முறை</title>
    <link rel="alternate" href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7709" />
    <author>
      <name>Masliya, A. L.</name>
    </author>
    <id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7709</id>
    <updated>2026-02-23T06:22:47Z</updated>
    <published>2024-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில்; இஸ்லாமிய நிறுவனங்களின் பங்கிளப்பு -வாழைச்சேனை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு முறை
Authors: Masliya, A. L.
Abstract: இலங்கை பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றமையினால் இந்தாட்டில் வாழும் மக்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தேவைப்பாடுகள் உள்ளன. அந்தவகையில் "சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் நல்லுறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தியுள்ளது இதனால் இப்பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமான ஒன்றாகும். இதனை ஒழுங்கமைக்கும் பொறுப்பில் இப்பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள்  சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்புகளை மேற்கொண்டு வருவதனை இவ்வாய்வினூடாக அறிந்து கொள்ள முடிந்தது. எனவே இவ்வாய்வானது சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுவதுடன் சமூக நல்லிணக்கத்தை பல்லின சமூக மட்டத்தில் ஏற்படுத்த இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிங்களிப்புக்களையும், எதிர்நோக்கும் சவால்கள்களையும் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கங்களாகும். ஆய்வு முறையியலானது பண்புசார் அடிப்படையில் காணப்படுவதோடு முதலாம் நிலைத்தரவுகளான நேரடி அவதானிப்பு, மற்றும் நேர்காணல் என்பவற்றையும் இப்பிரதேச பள்ளிகளின் தலைவர்கள் மற்றும் நிறுவன தலைவர்கள், உறுப்பினர்களுக்கள், போன்ற முக்கியமான நபர்களிடம் நேர்காணல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டவை பண்பு சார் தரவுகள் தர்க்கரீதியாக் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேறுகளுக்கமைவாக இப்பகுதியில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்க வாழ்வினை கட்டியெழுப்புவதற்கு பல்வேறுவிதமான முன்னேடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன் சமயக்கலந்துரையாடல்கள், சமூக சேவைகளை போன்ற பங்களிப்புகளையும் மேற்கொள்வதுடன் பல்வேறுபட்ட அரசியல், சமூக சவால்களையும் இந் நிறுவனவனங்கள் எதிர்நோக்குகின்றனர். இப்பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை நட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நிறுவனங்கள் பல்வேறுவிதமான பங்களிப்புகளை மேற்கொண்டு வந்தாலும் இப் பிரதேசத்தில் செயற்படும் இஸ்லாமிய நிறுவனங்களின் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்பட்டு வருகின்றதனை இவ்வாய்வினூடாக கண்டுகொள்ள முடிந்தது.</summary>
    <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

